Monday, September 8, 2025
Your AD Here

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சமில்லை -வியாழேந்திரன்!

இலங்கை
சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொள்ளப்போவது இல்லை-வியாழேந்திரன்!
சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொள்ளப்போவது இல்லை-வியாழேந்திரன்!

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற மக்களுக்கான உறுதிகளைப்பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையொன்று இன்று இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் 20இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுசென்றதையடுத்து இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது.

இதில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டதுடன் இதில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்