அம்பாறை தலைமைய பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மகா சங்கத்தினரின் பிரித் ஓதலுக்கு மத்தியில் பதவியேற்பு கடிதத்தில் கையெழுத்திட்டார்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இணைவதற்கு முன்பு உபுல் இந்திரஜித் குணவர்தன மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றினார்.








