பொலிஸ்மா அதிபரின் பதவி இன்னும் வெற்றிடமாகவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய விசேட உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனே இருப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.