ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் விசேட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் வந்திறங்கியுள்ளார்.
இன்று அத்துருகிரியவிலுள்ள சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இது குறித்து அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வினவிய போது, தேர்தல் சட்டங்கள் அமுலில் உள்ளதால் அந்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களைப் பயன்படுத்தாது முச்சக்கர வண்டியில் வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிப்பது நல்ல நடைமுறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.