களுத்துறை – பயாகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (29) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





