Wednesday, September 10, 2025
Your AD Here

பொலிஸாரை புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞன் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறு நபர் ஒருவர் காணிக்கு உரிமை கோரி வந்துள்ள நிலையில் வன்முறை கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வர்த்தகரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

அது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொலிஸாருடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் பெண்மணி ஒருவர் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பெண்மணியின் மகன் என சொல்லப்படும் நபர்களால் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பெண்மணியின் மகன் ஒருவர் நேற்றையதினம் இரவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று பொலிஸாரை அச்சுறுத்தி புகைப்படம் எடுக்க முற்பட்ட வேளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்