எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இதுவரை 17 பேர் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக
ரணில் விக்கிரமசிங்க
சரத் கீர்த்திரத்ன
ஓஷல ஹேரத்
ஏ. எஸ். பி. லியனகே
சஜித் பிரேமதாச
பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க
விஜயதாச ராஜபக்ஷ
கே.கே. பியதாச
சிறிதுங்க ஜயசூரிய
அஜந்த டி சொய்சா
கே. ஆனந்த குலரத்ன
சரத் மனமேந்திர
வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர்
அக்மீமன தயாரதன தேரர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் சுயேட்சை வேட்பாளராக நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அத்துடன் அருணலு மக்கள் முன்னணி சார்பில் அதன் செயலாளர் வைத்தியர் கே.ஆர். கிஷான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.





