60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு நிலையான வைப்புகள் மீதான வருடாந்த வட்டி விகிதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைவாக அதிகபட்சமாக 1 மில்லியன் ரூபாய் வைப்புத்தொகைக்கு முதல் 2 வருட காலப்பகுதிக்கு 10 சதவீதம் வரை வட்டிவீதத்தை வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது .





