பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்துக்கு இன்று (06) அறிவித்துள்ளார் .
பாராளுமன்றம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 9.30க்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பின் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார் .
மேலும் அவரது வெற்றிடத்துக்கு ஜே.சி அலவத்துவல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளார்.