வாகரை – பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை குறுக்கே கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வாழைச்சேனை மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனுடன் தாயார், தந்தையார் முச்சக்கரவண்டியில் நேற்றய தினம் இரவு பிரயாணித்துக் கொண்டிருந்தபோது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க மின்விளக்கு எரியாது பழுதடைந்துள்ள நிலையில் பாலத்தில் நிறுத்திவிட்டு அதனை தந்தையார் சரி செய்துகொண்ட நிலையில் தாயார் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்பக்கமாக சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் வீதியின் குறுக்காக கடந்து தாயாரிடம் செல்ல முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த வேன் சிறுவனை மோதிய நிலையில் படுகாயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.