வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று காலை நடைபெற்றது .
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று இரவு சப்பரத் திருவிழா நடைபெற்றது, இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது .
தேர், தீர்த்தத் திருவிழாக்களையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள், சுகாதார, குடிதண்ணீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





