மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாயே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
உயிரிழந்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடா பகுதியில் வீதியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.