மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் மலசலகூடத்திற்கு சென்ற தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கைதியை நேற்றய தினம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்று கூண்டில் அடைத்து வைத்துள்ளனர் .
இந்த நிலையில் குறித்த கைதி நேற்று பகல் 12 மணியளவில் கூண்டில் இருந்து மலசலம் கழிப்பதற்காக சிறைக்காவலர் அழைத்து சென்று மலசலம் கழிப்பதற்கு விட்டுவிட்டு வெளியில் காவல் இருந்துள்ள நிலையில் கைதி மலசலகூட கூரையை கழற்றி அதனூடாக தப்பி ஓடியுள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸாரும் சிறைக்காவலர்களும் அவரை மீண்டும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.