ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிமித்தம் வட மாகாணத்துக்கு விஐயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் நல்லூர் கந்தசுவாமி
கோவிலுக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் ஆசி பெறும் பொருட்டு இன்று (31) காலை ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார் .





