Tuesday, September 9, 2025
Your AD Here

36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் சிரேஷ்ட்ட ஊடகவியாலாளர் வி. ரி. சகாதேவராஜா..

36 வருடங்கள் சிறப்பான முறையில் கல்விச்சேவை செய்து நாளை 28 ஆம் திகதி அறுபது வயது பூர்த்தியடைவதையிட்டு இன்று ஓய்வு பெறுகிறார் மூத்த ஊடகவியலாளர் விபுலமணி வி. ரி. சகாதேவராஜா.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் மிக நீண்ட காலம் 26 வருடங்கள் உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி இன்று ஓய்வு பெறும் வி. ரி. சகாதேவராஜா அவர்கள் அவரின் சொந்த ஊரான காரைதீவு நிருபர் என நாடறிந்த ஊடகவியலாராகவும் தனது சேவையை தொடர்கிறார்.
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தர அதிபராவார். விபுலாநந்த அடிகலாறின் தீவிர பக்தராவார்.

கல்வியாளராக, ஊடகவியலாளராக, இலக்கியவியலாளராக,ஆன்மீகவியலாராக,நிகழ்ச்சித் தொகுப்பாளராக, சமூக சேவையாளராக பல துறை ஆளுமையாக அனைவராலும் அறியப்பட்ட வி. ரி. சகாதேவராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு தெரிவித்துக் கொள்கிறது

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்