Tuesday, September 9, 2025
Your AD Here

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்!…

பாணந்துறை, பள்ளியமுல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த உத்தரவை மீறும் வகையில் லொறி முன்னால் சென்றதால் பொலிஸார் லொறியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

லொறியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த லொறி கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்