செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எனவே விழாக்களுக்குச் செய்யும் வீண் விரயத்தைக் குறைக்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து கிடைத்த ஒதுக்கீடுகள் மற்றும் செலவழிக்கப்பட்ட தொகைகள்
குறித்த புள்ளிவிவரங்கள் அமைச்சிடம் உள்ளன.
ஆனால் அந்த செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இதுவரை எந்த அவதானிப்பும்
செய்யப்படவில்லை. செலவழித்த பணத்தில் என்ன நடந்தது என்பது பற்றி விரைவாக உள்ளக கணக்காய்வு ஒன்று செய்யப்பட வேண்டும்.
அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்துக் கண்டறிய நிறுவன ரீதியாகக் குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை.
அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.
மற்றுமொரு முக்கிய விடயம் இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் கடமைகளின் போது நிகழும் வன்முறை மற்றும்
துஷ்பிரயோகம் குறித்துக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டு அமைச்சிடம் முறையான ஒரு திட்டம் இல்லை. எனவே, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்துக் கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் சரியான வேலைத்
திட்டத்தைத் தயாரிக்குமாறு நான் தெரிவித்துள்ளேன்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.