Wednesday, September 10, 2025
Your AD Here

வேலுகுமாரை இணைத்துக்கொள்வதில்லை என சஜித் உறுதி..

பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து
போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் நேற்று (29) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தான் கலந்து கொண்டதாகவும் இதன்போது, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிய கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை ஐக்கிய மக்கள் சக்திக்கு இணைத்துக்கொள்ள மாட்டோம் என சஜித் பிரேமதாச உட்பட அக்கட்சியின் தலைவர்கள் எமது கூட்டணிக்கு உறுதியளித்தனர்.” என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்