Thursday, September 11, 2025
Your AD Here

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய  வைத்திய அத்தியட்சகராக வைத்தியர்  ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக  10.09.2025 முதல் வைத்தியர்  ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ்  அம்பாறை மற்றும்  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்தவர் என்பதுடன் ரஹ்மான் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக நீண்ட காலம் பணிபுரிந்து தற்பொழுது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்  வைத்தியர்  ஏ. எல். எப். ரஹ்மான் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (11)  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியட்சகராக  கடமையேற்கவுள்ள அவரை    விஷேட வைத்தியர்கள், வைத்தியர்கள், கணக்காளர்கள், நிருவாக உத்தியோகத்தர், தாதிய பரிபாலகி, பராமெடிக்கள் உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அதிபர்ககள் , அலுவலக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் வரவேற்க தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்