Tuesday, September 9, 2025
Your AD Here

நெல் உர மானியம் அதிகரிப்பு

நெற்பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அடுத்த போகத்தில் இருந்து உர மானியத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம்  25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்