Monday, February 9, 2026
Your AD Here

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கவனம் செலுத்தியுள்ள சுவீடன்.

சுவீடன் அரசாங்கம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான சுவீடன் துாதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுவீடன் தூதுவர் Jan Thesleff நேற்று (04) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டமைக்கு ஸ்வீடன் அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பில் சுவீடன் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுவீடன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுவர் போஷாக்கு பிரச்சினையை சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்த பிரதமர், இலங்கை பிராந்தியத்தில் உயர் சுகாதார குறிகாட்டிகளை பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கு சவால்கள் இன்னும் காணப்படுவதாக வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்