பாதுகாப்பு அமைச்சகம் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தற்காப்புக்காகக் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துத் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைத் திரும்பப் பெற அந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மறுஆய்வு மற்றும் தேவையைத் தீர்மானித்த பின்னர் அந்த நபர்களுக்குத் துப்பாக்கிகள் திரும்ப வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.





