Saturday, April 25, 2026
Your AD Here

நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது : வேட்பு மனுவை கையளித்தார் சஜித் !..

இதன் பிரகாரம், நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட செயலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரால் குறித்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வேட்பாளர் தெரிவில் கடும் போட்டி காணப்பட்டது. பெண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதிகளவான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவோம் என்று எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியலில் அல்லது வேறு எந்தத் தொழிலிலும் பணிபுரிபவர்கள் அனைவரும் தங்கள் சேவையை முடித்துக் கொள்ள வேண்டிய காலம் வரும். மக்களின் ஆசீர்வாதத்திற்கும் விருப்புக்கும் உட்பட்டு செயற்படுவதே இறுதியில் முக்கியமானது என ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்