ஆளும் தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்குப் போட்டி கிடையாது என்றும், தமக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்குகளை வழங்கித் தெரிவு செய்ய முடியும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு,கொத்தடுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தால் எந்தப் பிரயோசனமும் கிடையாது என்பதால், 225 உறுப்பினர்களையும் புறக்கணிக்க முன் வந்தனர். பாராளுமன்றத்திற்கு இடிவிழ வேண்டும் என்றனர்.
அதே வேளை, பாராளுமன்றத்திற்கு எவரும் பலாத்காரமாகச் செல்லவில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இவர்கள் அங்கு செல்கின்றனர்.
பெண்களுக்கு எமது கட்சி முன்னுரிமையளித்துள்ளது. இந்த நாட்டைப் பெண்கள் பிரதிநிதித்துவம் மூலமே, பிரசித்தப்படுத்த முடியும். இதற்குப் பெண்கள் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.






