இலங்கைக் கடற்சூழலுக்குப் பாரிய மாசடைவை ஏற்படுத்திய X – Press Pearl கப்பல் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
X – Press Pearl கப்பல் விபத்தினால் இலங்கை கடல் சூழல் மற்றும் சமுத்திரத்திற்குப் பாரிய பாதிப்பு ஏற்ப்பட்டிருந்தது.
இதனால் மீனவ சமூகத்தின் ஒரு பகுதியினரும் பாதிப்பை எதிர்கொண்டனர். விபத்தினால் இலங்கை முகம்கொடுத்த பல்வேறு வகையிலான இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்துப் புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் X – Press Pearl கப்பல் விபத்துடன் தொடர்புடையதாக இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலும் விசாரிக்கப்படும்.
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.






