Tuesday, September 9, 2025
Your AD Here

தேசபந்து நியமனம்: ரணிலுக்கு எதிரான மனுக்களுக்கு தேதி.

​தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பெப்ரவரி 12ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

​பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

​இதன்படி, இம்மனுக்கள் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

​கர்தினால் அதிஉயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்