நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தேசிய மக்கள் சக்தியே தீர்வு வழங்கும் எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஆட்சியமைத்தல், ஆட்சியைக் கலைத்தல் மற்றும் கட்சித் தாவல்கள் என்பன கடந்த 76 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மக்களும் நாடும் பல துன்பங்களை எதிர்நோக்கியதே இறுதி விளைவாக அமைந்துள்ளது.
இவற்றிலிருந்து மீள்வதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை, அந்த மாற்றம் தான் தேசிய மக்கள் சக்தி, எமக்கு நிச்சயமாக வெற்றியடைய முடியும்.
அவ்வாறானால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





