Wednesday, September 10, 2025
Your AD Here

GMOAவின் வேலைநிறுத்த போராட்டம் 8 மணியுடன் நிறைவு…

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று (13) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.


இருப்பினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்கிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையில் போராட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்று காலை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விஜேநாயக்க தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்