சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமப் பகுதியில் உள்ள உணவகங்கள் இன்று 2026.01.01 திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இப்பரிசோதனை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் தலைமையிலும், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்களிப்புடனும் நடைபெற்றது.
பரிசோதனையின் போது சில உணவகங்கள் குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன், அவற்றை சரிசெய்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.









