பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானம் வேதன நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார் .
இதற்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .





