இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்தியா-இலங்கை நாகரிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நெருக்கமான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் ஜெய்சங்கர் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
1968ஆம் ஆண்டு பிறந்த விஜித ஹேரத், 2000ஆம் ஆண்டில் இருந்து கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.