Monday, February 9, 2026
Your AD Here

யாழில் வன்முறை கும்பலால் ஆடையகத்துக்கு தீ வைப்பு…

யாழ்ப்பாணம் – நெல்லியடியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் கொண்ட குழு ஆடையகத்தை சேதப்படுத்தி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆடையகத்தில் சில வாரங்களுக்கு முன்பும் நுழைந்த வன்முறைக் கும்பல் தீ வைக்க முயன்று தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்