Monday, February 9, 2026
Your AD Here

யாழ் காங்கேசன் துறையை வந்தடைந்த கப்பல்…!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகங்கள் இடையிலான இந்திய, இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது.

இதன்படி இன்று (22) காலை நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

83 பயணிகள் குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததுள்ளதுடன், 83 பேர் இலங்கையிலிருந்து அங்கு செல்லவுள்ளனர்.

பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் போக்குவரத்து கப்பல் நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.

இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்