அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காகத் தகுதியான செயலில் உள்ள கட்சிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (27) விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.
இதற்கமைவாகத் தேர்தல் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மார்ச் மாதம் 28ஆம் திகதி பிற்பகல் 03:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பதிவுத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக் குழுவிடம் நேரில் சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.





