சர்வதேச கிரிக்கட் சம்மேளன (ICC) செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் B குழுவில் இருந்து, அவுஸ்திரேலிய அணி, அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பேற்றுள்ளது.
நேற்று (28) பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதன் அடிப்படையில், இதுவரை 4 புள்ளிகளை பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றது.
இதேவேளை A குழுவில் இருந்து ஏற்கனவே இந்தியாவும், நியூசிலாந்து அணியும் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.





