2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவிலிருந்து10,153 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,860 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,181 சுற்றுலாப் பயணிகளும், பிராஸ்சிலிருந்து 2,335 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,153 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.