Monday, February 9, 2026
Your AD Here

கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ள அனைத்து மாகாண செயலாளர்கள்.

நாட்டின் அனைத்து மாகாண செயலாளர்களும் அடுத்த வாரம் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன (Chandana Abeyratne) தெரிவித்துள்ளார்.

கடந்த 06 மாதங்கள் தொடர்பான மீளாய்வு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் மாகாணங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் உள்ளூர் மட்டத்தில் சேவை வழங்கல், நிறுவன சிக்கல்கள், வரவு செலவுத்திட்ட பயன்பாடு மற்றும் பொதுத் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவதை மேம்படுத்துவதற்கான உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நடைபெற்று வரும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார மீட்பு முயற்சிகளின் வெளிச்சத்தில், பிராந்திய திட்டங்களை பரந்த தேசிய கொள்கை கட்டமைப்போடு இணைப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்