ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க, ஒரு குழு அல்லது அது போன்ற ஒரு பொறிமுறையின் மூலம் செயல்படவும் கட்சி உத்தேசித்துள்ளது. அண்மைக் காலமாக, பொதுவான பிரச்சினைகளில் ஒத்துழைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
அந்த கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த கட்சி உறுதியாக இருப்பதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெளிப்படையாகவும், கூட்டாகவும் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.