ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பல அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தந்தை மருத்துவர் இராசபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொரளை, ஜயரத்ன துயிலும் இல்லத்திற்கு விஜயம் செய்தனர்.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான எஸ். எம். இராசமாணிக்கம் அவர்களின் புதல்வரும், மதிப்புக்குரிய மருத்துவ நிபுணருமான மருத்துவர் இராசமாணிக்கம், 67வது வயதில் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி காலமானார்.





