Tuesday, June 3, 2025
Your AD Here

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கைது.

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜயபாஸ்கர் கைது
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூர் மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

மேலும், இது குறித்து கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அதன்படி, கரூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

அப்போது அவர்கள் கொடுத்த மனுவில், அரசியல் முன்விரோதத்தால் பொய் புகார் கொடுத்துள்ளனர் என்று கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்