தமிழகத்தின் திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் .
இந்தநிலையில் நேற்றைய தினம் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் .
அதேநேரம் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிலரும் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.