அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்ஓயா திட்ட சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் நிலையில் இருப்பதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக்க அபேவிக்ரம கையொப்பம் இட்டு வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழ் காணும் பிரதேச செயலக பிரிவு மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பாக முன்னாயத்தமாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.
தமன
அம்பாறை
இறக்காமம்
அட்டாளைச்சேனை
சம்மாந்துறை
நிந்தவூர்
காரைதீவு
சாய்ந்தமருது
கல்முனை
நாவிதன் வெளி





