கொழும்பு – நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு, பண்டாரநாயக்க தேசிய நினைவுப் பணி அறக்கட்டளை (BNMF) சார்பில் 250 மில்லியன் ரூபாய் ($250 Million) நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நன்கொடையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் அலுவலகத்தில் வைத்துப் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதே இந்தக் கொடுப்பனவின் பிரதான நோக்கமாகும். அவசர காலங்களில் அரசாங்கத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதியுதவி பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





