Monday, February 9, 2026
Your AD Here

நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்

இலங்கையின் 1,489 வைத்தியர்கள் மூன்று ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்தே அவர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, அரசுக்கும், வரி செலுத்துவோருக்கும் 41.5 மில்லியன் டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் வெளியேற்றமானது, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பை சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கியமான சிறப்புப் பிரிவுகளில் வெற்றிடங்களுக்கு வழிவகுத்துள்ளதுடன் மருத்துவக் கல்வியை சீர்குலைத்தது என்றும் ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட “சர்வதேச சுகாதார திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ இதழ்” இந்த தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்