இலங்கையில் 1983 ல் இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது வருடத்தை நினைவு கூர்ந்து எதிர்ப்பு பேரணியொன்று பிரித்தானியாவில் நேற்று மாலை நடைபெற்றது. 1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் ஒருங்கிணைப்பு குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சர்வதேச நீதிக்கனா தமிழ் ஈழ மக்கள் இணைந்து இந்த பேரணியை நடத்தினர். பிரித்தானிய நாடாளுமன்ற சத்துக்கத்தில் நடைபெற்ற இப்ப பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஊடாக நடாத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி யோக லிங்கம் சொக்கலிங்கம் செயலாளர் ராஜலிங்கம் மற்றும் நிசான் ரமேஷ் நிரூஜனன் மற்றும் எடின் மற்றும் பல அங்கத்தவர் கலந்துகொண்டனர் என தெரிகிறது.








