சர்ச்சைக்குரிய ஜீப் தொடர்பாக சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடிக்கு எதிர்வரம் ஓகஸ்ட் 01ஆம் திகதி வரைவ விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் தொடர்பாக இடம்பெற்று வரும் வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி இன்று (24) மத்துகம நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.





