போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகச் செயலாளரான சுரங்க லக்மால் செனவிரத்ன அவர்கள், துறை அமைச்சர் பிமால் ரத்நாயக்க அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பதவியில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில், இந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்த பல அதிகாரிகள் இராஜினாமா செய்துள்ளனர்.
சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, அமைச்சர் பிமலிடம் இருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பிரிவுகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





