இலங்கையில் வாகனங்களின் விலைகள் அண்மைய வாரங்களில் ரூ. 10 இலட்சம் முதல் ரூ. 15 இலட்சம் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர், இந்திக சம்பத் மெரின்சிகே, இந்த விலை வீழ்ச்சிக்கு தேவை குறைவு மற்றும் ஜப்பானில் வாகன ஏல விலைகள் குறைந்ததே காரணம் என்று கூறியுள்ளார்.
முன்னர் சுமார் ரூ. 10 மில்லியனுக்கு விற்கப்பட்ட வாகனங்கள் இப்போது சுமார் ரூ. 500,000 ஆல் குறைந்து உள்ளன, அதே சமயம் ரூ. 20 மில்லியன் வரம்பில் உள்ள வாகனங்கள் ரூ. 1 முதல் 1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விலை வீழ்ச்சிக்கு காரணங்கள்:
-நுகர்வோரின் ஆர்வமின்மை காரணமாக -சந்தை மந்தமடைந்துள்ளது.
-அதிக வரிகள்.
-புதிய இறக்குமதி பதிவு விதிகள்.
புதிய 90 நாள் பதிவு விதி:
கடந்த டிசம்பரில் நிதியமைச்சகம் வெளியிட்ட ஒரு உத்தரவின்படி, இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் சுங்க அறிவிப்பு தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், இறக்குமதியாளர்கள் 3% அபராதத்தை செலுத்த நேரிடும்.
90 நாள் விதியும், பலவீனமான தேவையும் வர்த்தகத்தில் உள்ள பலருக்கு பணப்புழக்கச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், விலைகள் தற்காலிகமாக குறைந்துள்ள நிலையில், “வாகனம் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல நேரம்” என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





