செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (04) மேலும் 04 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இன்று புதிதாக 11 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றுடன் இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 224 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 43வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.