Sunday, September 7, 2025
Your AD Here

எல்ல விபத்து: இயந்திரக் கோளாறே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்

எல்லவில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, இந்த கோளாறு தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

​எவ்வாறாயினும், விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

​எல்ல-வெல்லவாய பிரதான வீதியை விட்டு விலகி படுகுழியில் பாய்ந்த பஸ், பின்னர் மீட்கப்பட்டது.

​மேலதிக பரிசோதனைகளுக்காக குறித்த பஸ் நாளை (08) அரசாங்க பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்